Thursday, July 21, 2011

புரிபடவே இல்லை
சில விஷயங்கள்.
மனிதன் நாகரீகத்தை பற்றி பேசிக்கொண்டே
நாகரீகமற்று போயிகொண்டிருக்கிறான்.
எங்கே யாரால் தொடங்கியது?
சக மனிதனை சாகடித்து சந்தோசப்படும் மனித இயல்பு!
மிருகம் மனிதனான போது
உணவுக்காக தொடங்கியதா?
இல்லை பெண் உறவுக்காக தொடங்கியதா?
புரிபடவே இல்லை!
கற்காலத்தில் தொடங்கியது ,
இக்காலத்திலும் நின்ற பாடில்லை.
மனிதனின் இருப்பிடமும்,
உடைகளும்,வாகனங்களும்
பிற வசதிகளும் மேம்பட்டுள்ளது,
மனம் மட்டும் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது.

நாடு பிடிக்கும் ஆசையில்
தான் சென்ற தேசங்களை எல்லாம் ஆளுமைக்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல்
அங்கு வாழ்ந்த மக்களை அடியோடு கடைசி மனிதன் வரை கொன்று அழித்த அயோக்கியர்கள்
மனித நேயத்தை பற்றி உலகிற்கு சொல்லித்தருகிறார்கள்
அதற்க்கு சட்டம் வகுத்தும் தருகிறார்கள்.
கொடுமை
அதை பின்பற்றும் நம்நாட்டு ஊடகங்கள்
அவர்கள் வழியிலேயே செல்கின்றன .
பாலஸ்தீனியர்கள் அநியாயமும்,
அக்கிரமுமாக தங்கள் நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு .
கொடூரமாக கொல்லப்பட்டும் சாகும் பொது
அவர்கள் மேல் அனுதாபபட்டு எழுத துணியும் ஊடகங்கள் கூட இல்லாமல் போனது கொடுமை
ஆனால் அதே பாலஸ்தீனியர்கள் தங்கள் உரிமைக்கு போராட தொடங்கியபோது
தீவிரவாதிகளாகிவிட்டார்கள்.திட்டமிட்டு ஆக்கிவிட்டார்கள்.
அதை உலக ஊடகங்களும் அப்படியே எழுதுகின்றன.
ஆனால் இஸ்ரேலும்,அதனை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகளும்,அமெரிக்காவும் செய்யும் அயோக்கியத்தனத்தையும் ,
நடவடிக்கை என்ற பெயரில் தான் எழுதுகின்றன.
இந்திய ஊடகங்களும் ,செய்தித்தாள்களும்.
ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள்?

இலங்ககையில்
தங்கள் உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளும்
இதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்பட்டார்கள் ,
இஸ்ரேல் செய்தது போல்தான் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள்.
அமேரிக்கா,பிரான்ஸ்,இங்கிலாந்து,
இன்னும் பலநாடுகளுக்கு புலிகளோடு சேர்த்து கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்கள் வேதனை தெரியவில்லை .தெரிந்தும் கண்டுகொள்ளப்படவில்லை! காரணம்?
லிபியாபோல்,ஏமன் போல்,இன்னும் பிற பாலைவன நாடுகள் போல் என்னை வளம் தமிழர்கள் பகுதியில் இல்லை
ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.


உருவம் இல்லையென்றும்,
இருக்குதென்றும் இவ்வையகத்தார்
நம்பிக்கொண்டிருக்கும்
இரக்கமற்ற கடவுளே !
எல்லாத்துன்பங்களையும் தந்தாய்
அதோடு
கொஞ்சம் எண்ணெய் வளத்தையும்
எங்கள் நிலத்தில் தந்திருக்க கூடாதா?
அதை ஆளும் ஆசையிலாவது
மேல் நாடுகள் ராஜபக்சேவின் தலையில் குண்டு போட்டு
எங்கள் தமிழ் மக்களை காப்பாற்றி இருப்பார்கள்.
உன்னால் முடியாததை
மற்றவர் செய்து விடக்கூடாது என்ற வஞ்சக எண்ணத்தில்
இதிலும் கைவிட்டுவிட்டாய் கேடுகெட்ட கடவுளே!